உலகில் உள்ள பாரம்பரிய மொழிகளில் மிகவும் பழமை வாய்ந்தது தமிழ்.
10,000 ஆண்டுகளுக்கு முன் வறண்ட ஆறுகள் பற்றிய குறிப்புக்கள் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன. உண்மையில், தமிழ் சமஸ்கிருதத்தின் வேர் என்று ஒரு வாய்ப்பு உள்ளது.
இடைநிலை தமிழ் மொழியின் ஆண்டு (700-1600) .இது பண்டைய தமிழ் மொழியின் பரிணாமம் ஆகும். இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டில் முழுமையடைந்தது.
நவீன தமிழ் மொழியில் தோன்றிய மாற்றங்கள் நன்னூல் என்னும் நூலில் குறிப்பிடபட்டுள்ளது மற்றும் நவின தமிழ்மொழி என்பது 1600 ம் ஆண்டு தொடங்கபட்டது.
உலகில் உள்ள பண்டைய மொழிகளில் மிகவும் பழமை வாய்ந்தது தமிழ் மொழி மற்றும் உலக மொழிகளில் பாரம்பரிய மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ் மொழி. உலகம் முழுவதும் சுமார் 120 மில்லியன் மக்களால் தமிழ் மொழி பேசப்படுகிறது. இந்திய மாநிலமான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் அதிகாரபூர்வ மொழி தமிழ் மொழி.
பண்டைய காலங்களில் மக்கள் தங்களின் மொழியை வளர்த்துக்கொள்வதற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தனர் அதுமட்டுமல்லாது தங்களின் திறமைகளை பெரிய அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் முன் நிரூபிக்க வேண்டிய அவசியம் இருந்தது. எனவே, அவர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்காக "தமிழ் சங்கம்" என்றழைக்கப்படும் மன்றங்களை உருவாக்கினர்.
இச்சங்கங்கள் எழுத்தாளர்களுக்கு தங்களின் படைப்புகளில் உள்ள சொல் மற்றும் பொருள் குற்றங்களை திருத்துவதற்க்கும் மேலும் தங்களின் திறன்களை பல அறிஞர்கள் முன் வெளிப்படுத்துவதற்க்கும் உதவியது.
இதன்படி, உலகின் முதல் மற்றும் பழமையான மொழி தமிழ் மொழி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பண்டைய தமிழ்மொழியானது கி.மு 300 ஆம் ஆண்டு வரை செல்கிறது, ஆனால் இதன் தோற்றமோ கி.மு. 2500 ஆம் ஆண்டு வரை செல்வதாக கணிக்கபடுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மொழி இன்றும் மக்களால் பயன்படுத்தபடுகிறது இது உலகின் அற்புத மொழியாகும்.
இலக்கிய சான்றுப்படி பண்டைய தமிழ் நாகரிகம் மற்றும் தமிழ் மொழி குமரிக்கண்டத்தில் (லெமுரியா கண்டம்) தோன்றியது. குமரிக்கண்டம் அழிந்த கண்டங்களில் ஒன்றாகும்.
குமரிக்கண்டம் இந்தியப் பெருங்கடலில் இன்றைய இந்தியாவின் தெற்கே அமைந்துள்ளது.
இக்குமரிக்கண்டத்தில்தான் மனித கலாச்சாரம் தொடங்குகியது.
குமரிக்கண்டம் பல மன்னர்களால் அன்றைய காலங்களில் ஆளப்பட்டது.
பண்டைய தமிழ் அரசர்கள் மிகவும் மக்களை சார்ந்து வாழ்ந்தனர். அவர்கள் மக்களுக்காக கோயில்கள், கோட்டைகள், அணைகள், கப்பல்கள் முதலியவற்றை கட்டியெழுப்பினர் பல கோவில்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன.
கி.மு 3 ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி. 3 ஆம் நூற்றாண்டுகளில் வரலாற்று ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் சில பழமையான கோயில்களை பார்வையிடும்போது தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன.
உயிரெழுத்துக்கள்
மெய்யெழுத்துக்கள்
உயிர்மெய்யெழுத்துக்கள்
ஆயுத எழுத்து
தமிழ் எழுத்துக்கள்
தமிழ் மொழியின் வரலாற்று பெருமைகள் அனைத்தும் பொ.ச.மு. (BCE) இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குள்ளேயே காணப்படுகிறது, மேலும் உலகெங்கிலும் நீண்ட காலமாக இருக்கும் பாரம்பரிய மொழியாக தமிழ் மொழி கருதப்படுகிறது.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி
மேலும் வாசிக்கஉலகில் பல அதிசயங்கள் காணப்பட்டாலும் மிகச்சிறந்த அதிசயமாக திகழ்வது தமிழ் மொழி.
மேலும் வாசிக்கஉலக மொழிகள் அனைத்தலும் மிகவும் இனிமையானதாக கருதப்படுவது தமிழ் மொழி
மேலும் வாசிக்க2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இலக்கியப் பணிக்கான சிறப்பம்சங்கள் இதில் உள்ளன..
மேலும் வாசிக்கதமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்!
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்,